தூத்துக்குடி, ஜன. 11 - வரலாறு காணாத மழை - வெள்ளத்தால், தூத்துக்குடி, திரு நெல்வேலி, தென்காசி மாவட்டங் களில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலை யில், நிவாரண நிதியை வழங்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு கேட்ட ரூ. 37 ஆயிரத்து 907 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட செய லாளர் கே.பி. ஆறுமுகம் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், பி.பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ். அர்ச்சுனன், கு. ரவீந்திரன், தா.ராஜா, ஆர். பேச்சிமுத்து, சண்முக ராஜ், அப்பாதுரை, புவிராஜ் உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது: மழை - வெள்ளத்தால் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட ங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக, தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள மக்கள், வீடுகள், வாகனங்கள், கால்நடை கள் உள்ளிட்ட பல்வேறு இழப்பு களை சந்தித்துள்ளனர். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மணல் குவிந்துள்ளது.
பயிர்கள் சேதமடைந் துள்ளன. ஆனாலும், இதுவரை ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை. மாநில அரசு தன்னுடைய நிதியில் இருந்து அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ. 6 ஆயிரம், குறைவாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ. ஆயிரம் என நிவாரணம் வழங்கியுள்ளது. இது போதுமானதல்ல. கூடுத லாக வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். அதற்கு ஒன்றிய அரசின் நிதியுதவி தேவை என்ற நிலை உள்ளது. மேலும், விவ சாயிகளுக்கும், மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் நிவாரண நிதி வழங்கியுள்ளது.
ஆனால் இங்கு வெள்ள பாதிப்பு களை, ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் வந்து பார்வை யிட்டு சென்றனர். மத்தியக் குழு வினரும் இரண்டாவது முறையாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்ய வரவுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் தமிழக அரசு கோரி யுள்ள ரூ. 37 ஆயிரம் கோடி நிவாரண நிதியை இதுவரை ஒதுக்காதது கண்ட னத்துக்குரியது.
எனவே, தமிழக அரசு கோரியுள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு விரைந்து வழங்கவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் களால் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு ஒன்றிய அரசு வெறும் ரூ. 5 ஆயிரம் கோடிதான் இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில், அவர்கள் கேட்ட தொகைக்கும் அதிகமாக வழங்கு கிறது. தமிழக மக்களை ஒன்றிய அரசு பழிவாங்குவது போன்று தெரி கிறது. எனவே, தமிழக அரசு கோரி யுள்ள ரூ.37 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு விரைந்து வழங்கா விட்டால், அனைத்துக்கட்சிகளை யும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசினார்.