districts

img

விஷம் வைத்து மாடுகள் சாகடிப்பு

தூத்துக்குடி, டிச.26- தூத்துக்குடியில் விஷம் வைத்து மாடுகளை சாக டித்த நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் நூற் றுக்கும் மேற்பட்டோர் கால் நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வரு கின்றனர். இவர்களது மாடு கள் கோமஸ்புரம், மாப் பிள்ளையூரணி, அய்யனார் புரம் பகுதிகளில் உள்ள காடு களில் காட்டு மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். கடந்த 24ம் தேதி இந்த மாடுகள் வழக்கம் போல காலை மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாப்பிள் ளையூரணி காட்டுப்பகுதி யில் 5க்கும் மேற்பட்ட மாடு கள் இறந்து கிடந்தது. இதை யறிந்து மாட்டின் உரிமையா ளர்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். மேற்படி மாடுகள் நாட்டு மாடு, சிந்து, பிரிஸி யன் வகையை சார்ந்த மாடு களாகும். இந்த மாடு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மதிப்பு டையதாகும். மேலும் 13 மாடு களை காணவில்லை. இது குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் மாடுகளின் உரிமையாளர் கள் புகார் செய்தனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத் திற்கு சென்று அங்கு இறந்து கிடந்த 5 மாடுகளை உடற் கூறு ஆய்வு செய்ததில் மாடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரிய வந்தது. மாடுகளை கொன்ற  குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும்  என மாவட்ட எஸ்பிக்கு கால்நடைகளின் உரிமையா ளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.