தூத்துக்குடி, ஜன. 25 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில், கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் வித மாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவைகளை முகாம் அமைத்து தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திங்களன்று விளாத்தி குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் விளாத்திகுளம் அரசு மருத்துவ மனை சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் தமிழ் அமுதன்,நீதிமன்ற பணியாளர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும், முகக்கவசம் அணி வதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து, நீதிபதி சரவணன் உட்பட நீதிமன்றப் பணியாளர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுரக் குடிநீர் மருந்துகள் வழங்கப் பட்டது. மேலும் இந்நிகழ்வில் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ஜனார்த்தனன் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வுகளை அங்குள்ள பணியாளர்களிடம் எடுத்துக் கூறினார்.