districts

img

செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வருடன் சந்திப்பு மண் பெர்மிட் வழங்க கோரிக்கை

தூத்துக்குடி ,ஜன. 25 செங்கல் சூளைகளுக்கு மண் பெர்மிட் வழங்குவது தொடர்பான அரசாணையை செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு செங்கல் உற்பத்தி யாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு சங்க தலைவர் ரத்ன சேகர், பொருளாளர் சின்ன சாமி, இணை செயலாளர் நூர் முகமது, செல்லமுத்து, நிர்மல் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல் வரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.  அதில் கூறியிருப்பதாவது: தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு செங்கல் சூளைக ளுக்கு மண் பெர்மிட் வழங்க  கனிம சலுகை விதி 44 ஏற்படுத்தி அரசாணை வெளியிடப்பட்ட தற்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றியினை தெரி வித்துக் கொள்கிறோம். மேற்படி  அரசாணை இதுவரை எந்த மாவட்டத்திலும் செயல்படுத்தா மல் இருந்து வருகிறது.

இதனால் செங்கல் சூளைகள் மண் இல்லாமல்  மூடும் அபாயம் உள்ளது. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க  நிலை நேரிடும். அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக கூலி ஆட்களை கொண்டு நடைபெறும் தொழில் செங்கல் தயாரிக்கும் தொழிலாகும்.  பல லட்சம் ஏழை  குடும்பங்கள் இதனால் பாதிப்பு க்குள்ளாகும். எனவே புதிய அர சாணை எண் 213 ன் படி உரிய பெர்மிட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறியிருந்தார் கள். மற்றுமொரு மனுவையும் முதல்வரிடம் கொடுத்தனர். இதற்கு ஆவண செய்வதாக முத லமைச்சர் உறுதி அளித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரை முருகன் உடனிருந்தார்.