தூத்துக்குடி,மார்ச் 30 தமிழகத்தில் 1200 கால்நடை மருத்து வர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் . தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி சான்றி தழ் மற்றும் நகைகள் திருப்பி வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்க ளின் துணைப் பதிவாளர் வளர்மதி தலைமை வகித்தார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, சாத்தான்குளம் வட்டாட்சியர் தங் கையா, பேருராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய், ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, சார் பதிவாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 1064 பய னாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகளை திருப்பி வழங்கி பேசுகையில், தமிழகத்தில் 1200 கால்நடை மருத்துவர் பணியிடங்கள் நிரப்ப நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் கூட்டுறவு சங்கம் போல் மீனவர்களுக்கும் சிறப்பு கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட உள்ளன. அனைத்து வகை யான தொழில்களை தமிழகத்தில் கொண்டு வந்து வேலை யில்லா திட்டாட்டத்தை ஓழித்து எல்லா இளை ஞர்களும் வேலை வாய்ப்பு பெறும் வகையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றார்.