districts

இன்று இளைஞர் திறன் திருவிழா: திருவாரூர் இளைஞர்களுக்கு அழைப்பு

திருவாரூர், ஜூலை 4 -  திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்திட திட்டமிடப்பட்டு 10 வட்டாரங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக கொரடாச்சேரி வட்டாரம், அம்மையப்பன் ஊராட்சி, பாரத் கேட்டரிங் கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா ஜூலை 5 (செவ்வாய்) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இத்திறன் திருவிழாவில் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இலவச திறன் வளர்ப்பு பயிற்சியினை அளித்திட உள்ளூர் மற்றும் வெளியூரில் உள்ள 54 பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு நர்சிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், இயற்கை விவசாயம், பிட்டர், எலக்ட்ரீசன், கணினி பராமரிப்பு, ஏசி டெக்னீசியன், தையல், அழகுக்கலை உள்ளிட்ட பயிற்சிகளுக்கு பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திறன் பயிற்சி பெற்று வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களும் பதிவுசெய்து கொள்ளலாம். மேற்படி பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் விழாவிற்கு வரும்போது ஆதார், கல்விச்சான்று, குடும்ப அட்டை, நூறுநாள் வேலை அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வருகை தந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். 

;