திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தலையாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 260 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 44 ஆயிரத்து 723 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில், தலையாமங்கலம், தென்பாதி, குறிச்சி ஆகிய கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.