districts

img

கல்வி உதவித்தொகையை ரத்து செய்த ஒன்றிய அரசு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.17 - சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு ரத்து  செய்ததை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை  மக்கள் நலக் குழு சார்பில் சனிக்கிழமை மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தலைமை தபால்  நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்டத் துணைத் தலைவர் நூர்முக மது தலைமை வகித்தார். தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு திருவாரூர் மாவட்ட செயலாளர் ராமசாமி, சிஐடியு மாவட்ட  தலைவர் அனிபா, உழைக்கும் பெண்கள் ஒன்றிணைப்பு குழு மாவட்ட கன்வீனர் மாலதி, மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் இடும் பையன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

;