திருவாரூர், ஏப்.13 - வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006 ஆம் ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித் திருக்க வேண்டும். 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவர்க ளுக்கு மாதம் ரூ.200, பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு மாதம் ரூ.600 என வழங்கப்பட்டு வரு கிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராயின் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினராயின் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வரு மானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.72,000-க்கு மிகா மல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொ கையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படு கிறது. பதிவு செய்து 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவ ராக இருத்தல் கூடாது.
ஆயினும் தொலை தூரக் கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத் துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுய வேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை https;//tnvelaivaaippu. gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பயன்படுத்துமாறு அரசு விதிமுறைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தில் அனைத்து காலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலு டன் மே 31 ஆம் தேதிக்குள் அலுவலக வேலைநாளில் ஆர்விஎல் நகர், மன்னார்குடி ரோடு, விளமல், கூட்டுறவு நகர் பேருந்து நிறுத்தம், திருவாரூர் என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் நேரில் அளிக்க வேண்டும்.
உதவித்தொகை ஏற்கெனவே பெற்று வருவோரின் கவனத்திற்கு
மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து வருடங்க ளுக்கும், மற்றவர்களுக்கு மூன்று வருடங் களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்க ளில் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறிய வர்கள் உடனே சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து தவறாது நேரில் வந்து அளிக்கு மாறு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.