districts

img

காணாமல் போன சிலைகளை மீட்க குழு அமைப்பு: அமைச்சர் தகவல்

திருவாரூர், ஜூலை 30 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வர் திருக்கோயில் மற்றும் திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி திருக் கோயில் ஆகிய கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு  செய்தார். இந்த ஆய்வில், இந்து சமய  அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் க.மாரிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர் ்களிடம் கூறுகையில், “இந்து சமய அறநிலையத்துறை, சிலைகள் மீட்பு குழு அமைத்து 13 சிலைகளை மீட்டுள்ளது. வெளிநாட்டிலுள்ள சிலை களும் அடையாளம் காணப்பட்டு, அச்சிலைகளை மீட்டு வருகிற நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகளை உருக்கி அதை வங்கி யில் வைப்பு நிதியாக வைத்து, அதில் கிடைக்கும் வட்டி தொகைகளை கொண்டு திருக்கோயில் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக எருக்கங் குடி திருக்கோயில், தேவிபாவனி அம்மன் திருக்கோயில் ஆகிய கோயில் களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.