திருவாரூர், புதுக்கோட்டை, கரூர் ஜூலை 24 - டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 பணிகளுக்கான தேர்வு ஞாயிற்றுக் கிழமை தமிழகம் முழுவதும் நடை பெற்றது. காலை 9.30 மணிக்கு துவங்கும் இந்தத் தேர்வுக்கு 9 மணிக் குள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டுமென விதிமுறைகளில் குறிப் பிடப்பட்டிருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 35,646 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்தி ருந்தனர். 93 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 5090 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வடபாதிமங்கலம்
இந்நிலையில் திருவாரூர் நகர்ப்பகுதி யில் அமைந்துள்ள வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 5 நிமிடம் தாமதமானதால் 30-க்கும் மேற்பட் டோர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களது ஒரு வருடக் கனவு சிதைந்து போன தாக தேர்வர்கள் தெரிவித்தனர். நன்னிலம் ஒன்றியம், பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத் தில் தேர்வு எழுத வந்த தேர்வர்களை, தாமதமாக வந்ததாகக் கூறி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தோட்டம் தேர்வு மையத்தின் கதவுகள் முன்கூட்டியே பூட்டப்பட்ட தாகவும் அதன்பிறகு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை எனவும் கதவுக்கு வெளியே காத்திருந்த தேர்வர்கள் முறையிட்டனர். கதவின் அருகே காவலுக்கிருந்த காவலர்களி டம் முறையிட்ட பிறகும் அலட்சியமாக வந்த பள்ளி தலைமை ஆசிரியர், தேர்வர்கள் கெஞ்சியதை பொருட்படுத் தாமல் தேர்வு எழுத அனுமதிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து தொடர்புடைய மாவட்ட அளவிலான உயர் அதிகாரி களிடம் விசாரித்த பொழுது, ஒரு நிமிடம் தாமதமானாலும் அனுமதிக்கக் கூடாது என டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டி ருப்பதாக தெரிவித்தனர். இதற்கி டையே சம்பவ இடத்துக்கு வந்த, பேரளம் காவல் ஆய்வாளர் “குறித்த நேரத்துக்கு வராமல் தேர்வு எழுதி என்ன செய்யப் போகிறாய் என ஒருமை யில் பேசியதோடு வழக்குப் பதிவதாக வும் மிரட்டியதை” தொடர்ந்து தேர்வர் கள் கலைந்து சென்றனர். தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வர வேண்டுமென்பது தேர்வர்களை துரிதப்படுத்துவதற்காகத்தான் இருக்க வேண்டுமே தவிர, ஒரு சில நிமி டங்கள் தாமதத்திற்காக அவர்களை தேர்வு எழுத விடாமல் விரட்டுவதாக இருக்கக் கூடாது எனவும், பிற மையங் களில் இப்படி கெடுபிடி இல்லையென வும் அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர். புதுக்கோட்டை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணைய தொகுதி - 4 தேர்வை புதுக் கோட்டை மாவட்டத்தில் 40,871 பேர் எழுதினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறுகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தமிழக அரசின் பல்வேறு பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி தமி ழகம் முழுவதும் இன்றைய தினம் டிஎன்பிஎஸ்சி தொகுதி - 4 பதவிகளுக் கான தேர்வு நடைபெற்றது. புதுக் கோட்டை மாவட்டத்தில் 161 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 186 தேர்வு மையங் களில் நடைபெற்ற தேர்வினை 40,871 பேர் எழுதினர். 6,808 பேர் தேர்விற்கு வர வில்லை. தேர்வு நடைமுறைகள் அனைத் தும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.
கரூர்
கரூர் மாவட்டம் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் ஞாயிறன்று தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப் படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-IV தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 110 மையங்களில் மொத்தம் 30,646 தேர்வர்கள் தேர்வு எழுதி அனுமதிக்கப் பட்டனர். இதில் 4981 பேர் தேர்வு எழுத வரவில்லை.