திருவாரூர், மார்ச் 17- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கோடை வெயிலில் இருந்து பொதுமக் கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது கட்டா யமே. ஆனால் யதார்த்த நிலை வேறாக உள்ளது. திருவாரூர்- திருத்துறைப் பூண்டி இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் ஒன்றிரண்டு பேருந்து களில் பயணம் செய்பவர்களை கொளுத் தும் வெயில் இறங்கி நடந்துப் போகச் செல்கின்றனர் நடத்துநர்கள். மார்ச் 16ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் செல்வதற்கு பயணச் சீட்டு வாங்கிய பயணிகளை திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி விடாமல் திருவாரூர்-நாகப்பட்டினம் பைபாஸ் மேம்பாலத்தில் இறக்கி விட்டுள்ளனர். வயதானவர்கள் மற்றும் கை குழந்தைகள் வைத்து இருந்த தாய் மார்கள் மிகவும் அவதியுற்றனர். திரு வாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் அருகிலுள்ள கடைவீதிக்குச் செல்ல சுட்டெரிக்கும் வெயிலில் நடக்க முடியாமல் நடந்தும், சிலர் ஆட்டோ பிடித்தும் சென்றனர். பயணிகளிடம் பேசியபோது, “அரசுப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் சென்று பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. சில தனி யார் பேருந்துகள் பைபாஸ் மேம்பாலத் தில் இறக்கி விட்டுச் செல்கின்றன. ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு சாலை யை கடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் சென்று பய ணிகளை இறக்கிவிட்டு பின்னர் புதிய பேருந்து நிலையம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். (ந.நி.)