districts

img

திருவாரூர் மத்திய பல்கலை.,யில் 7 ஆவது பட்டமளிப்பு விழா

திருவாரூர், மார்ச் 13-  திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்க லைக்கழகத்தில் 7-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜி.பத்மநாபன் தலைமை வகித்தார். துணைவேந்தர் மு. கிருஷ்ணன் வரவேற்றார். தில்லி சர்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி  தொழில்நுட்ப இயக்குனர் பேராசிரியர் ரமேஷ் வி.சோண்டி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பதிவாளர் சுலோச்சனா சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்கள் பி.எஸ். வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். நிகழ்ச்சியில் 523 மாணவிகள், 394 மாண வர்கள் என மொத்தம் 917 பேருக்கு பட்  டங்கள் வழங்கப்பட்டன. இதில், 39 மாணவ,  மாணவிகள் பல்கலைக்கழக அளவில் இடங் களை பிடித்து பதக்கங்களை பெற்றனர்.