districts

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் ஜூன் 29 வரை உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்

திருவாரூர், ஏப்.15 - திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழி லாக உள்ளது. மேலும், நெல் பயிருக்கு அடுத்தபடியாக உளுந்து, பச்சைப்பயறு மற்றும் பருத்தி பயிரிடப்படுகிறது.  இந்நிலையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ராபி 2021-22 பருவத்தில் 1.4.2022 முதல் தொடங்கி 29.6.2022 வரை  தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணைய நிறுவனத் தின் மூலமாக ஒன்றிய அரசால் குறைந்தபட்ச ஆதார விலை யில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் முதன்மை கொள்முதல் நிலையங்களாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட உள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் உளுந்து 4500 மெ.டன்,  பச்சைப்பயறு 1200 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.63.00 (ரூ.6300 குவிண்டால்), பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 (ரூ.7275 குவிண்டால்) திருவாரூர் விற்பனைக் குழுவிற்குட் பட்ட திருவாரூர், மன்னார்குடி, வடுவூர், பூந்தோட்டம் மற்றும்  குடவாசல் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, கொள்முதலுக்கு கொண்டு வரப்படும் உளுந்து  மற்றும் பச்சைப் பயறு விளைபொருள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி இதர பொருட்கள் 0.10 சதவீதம், இதர தானியங்கள்  கலப்பு 0.1 சதவீதம், சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதம், வண்டு  தாக்கிய பருப்புகள் 2 சதவீதம், ஈரப்பதம் 10 சதவீதம் இருக்கலாம். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயி கள் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விற்பனைக்கு கொண்டு  வருவதற்கு முன்பு, உரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  முன்பதிவு செய்யும் போது அசல் சிட்டா, கிராம நிர்வாக அலுவ லர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கிகணக்கு புத்தக நகல்,  ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை  சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். இதற்கான  பணம் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான விவரங் களுக்கு 9047155282, 9943172167, 9443251041, 9597697501 ஆகிய  தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.