திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இரண்டு 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக குடும்ப நலப்பணிகள் துணை இயக்குநர் உமா, கோட்டூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.