districts

img

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 4 - பணி நிரந்தரம் செய்யப் படாத ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நியாய விலைக்கடை ஊழி யர்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அகவிலைப் படியை உடனே வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி  உயர்வு வழங்கப்பட வேண் டும். பழுதடைந்த கட்டடங் களை கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் சீர மைத்து தர வேண்டும். 500 -க்கும் அதிகமான குடும்ப அட்டை இருக்கும் கடைக ளில் உதவியாளரை நிய மிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கூட்டு றவு சங்க ஊழியர்கள் திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள மண்டல இணைப் பதிவாளர் அலுவ லகம் முன்பு நடத்தினர்.  சங்கத்தின் மாவட்ட  செயலாளர் வி.முருகானந் தம் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் எஸ்.சித்ரா, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வம், மாவட்ட நிர்வாகிகள் எம். செல்வராஜ், ஜே.ராஜேந்தி ரன், வி.குணசேகரன், பி. கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.