districts

img

பவித்திரமாணிக்கம் கடைவீதியிலிருந்த பெரியார் சிலை சேதமின்றி இடமாற்றம்

திருவாரூர், மே 14 - திருவாரூர் மாவட்டம் காட்டூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு அருங்காட்சியகம் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் பிறந்தநாளை அரசு விழா வாகக் கொண்டாட தமிழக அரசு திட்ட மிட்டிருப்பதால் ஜூன் 3 ஆம் தேதி இந்த அருங்காட்சியகமும் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி பிறந்தநாள் விழா  கொண்டாட்டங்களுக்கு முன்னேற்பா டாக திருவாரூர் - குடவாசல் சாலையில்  சாலை விரிவாக்கப் பணிகள் ஒருமாத மாக நடைபெற்று வருகின்றன. சாலை யின் இருமருங்கிலும் இருந்த மரங்கள்,  பழைய கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.  இப்பணிகளால் பவித்திரமாணிக்கம்  கடைவீதியில் சாலையோரம் அமைந்தி ருந்த தந்தை பெரியார் சிலைக்கு சேதம் ஏற்படுமோ என்று பொதுமக்கள் கவலையடைந்தனர். இதற்கிடையே வெள்ளிக்கிழமை இந்தப் பெரியார் சிலை எவ்வித சேதமுமின்றி பத்திர மாக அப்புறப்படுத்தப்பட்டு பவித்திர மாணிக்கம் நடுநிலைப் பள்ளி அருகி லுள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளா கத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் இத்தகைய நடவ டிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.