திருவாரூர், ஜூன் 11 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாரத்திற்குட்பட்ட அரிசந்திரபுரம் கிராமத்தில் சுரேஷ் என்ற விவசாயி 2.5 ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளார். இவர் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் கீழ் 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மத்திய பாதுகாப்பு அமைச் சகத்தின் இயக்குநர் டி.பிரவீன் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது சொட்டுநீர் பாசனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் சொட்டுநீர் பாசனம் அமைத்த விவசாயிகளிடம் கேட்டறிந்தார். தண்ணீர் சிக்கனம், தண்ணீர் சேமிப்பு குறித்து ஜல் சக்தி அபியான் குழு விவசாயிகளுடன் கலந்துரையாடி னார். இந்நிகழ்வில் ஜல் சக்திஅபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வேளாண்மை துறை இணை இயக்குநர் ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.