districts

img

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

திருவாரூர், மார்ச் 27-  திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், திருவாரூர் வட்ட சதுரங்க கழகம் மற்றும்  திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி இணைந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள்  நியூ பாரத் மெட்ரிக் பள்ளியில் நடை பெற்றது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, தஞ்சாவூர், மற்றும் அரியலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங் களை சார்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக தலை வர் சாந்தகுமார், தமிழ்நாடு சதுரங்க கழக இணைச் செயலாளர் பாலகுணசேகரன், சிபிஎம்  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, திமுக நகர மன்ற உறுப்பினர்கள் ரஜினி சின்னா, வாகை பிரகாஷ், நியூ பாரத்  பள்ளி நிறுவனர் நாகராஜன், தாளாளர்  பிரக தாம்பாள், பள்ளி முதல்வர் முரளிதரன் ஆகி யோர் பரிசுகளை வழங்கினர்.