districts

img

அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலையை உடனே துவக்குக!

திருவாரூர், ஜுன் 28 - திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் பணியை துவங்க வேண்டும். அரசு அறிவித்திருக்கிற சட்டக் கூலி  ரூ.319-ஐ வழங்க வேண்டும். வேலை  நடைபெறும் இடங்களில் தண்ணீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உட்பட பல் வேறு கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளி யன்று நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் 10ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.

திருவாரூர், கொரடாச்சேரி, நீடா மங்கலம், வலங்கைமான் மற்றும் திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட அனை த்து ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சி அலுவலகங்கள் முன்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்  போராட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியத்தில் பாமணி கடைவீதி மற்றும் மடப்புரம் ஆகிய இடங் களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பாமணியில் கே. மதியழகன், மடப்புரத்தில் சி.வீர சேகர் ஆகியோர் தலைமை வகித்த னர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் மற்றும் விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆறு.பிர காஷ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, திருத்து றைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செய லாளர் டி.வி. காரல் மார்க்ஸ் உட் பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்ட னர்.

திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியத்தில் 15 ஊராட்சி மன்ற அலுவலகங்கள் எதிரே ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என். முருகானந்தன், கே.தமிழ் மணி, ஒன்றியச் செயலாளர் வி.டி.கதிரேசன் மற்றும் விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் தலைமை வகித்தனர்.

முத்துப்பேட்டை 

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உப்பூர் உள்ளிட்ட 7 இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப் பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி மற்றும் விதொச அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோட்டூர்

கோட்டூர் ஒன்றியத்தில் செருவா மணி உட்பட 4 மையங்களில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. இருள்நீக்கி கிராமத்தில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.குமரராஜா கலந்து கொண் டார். செருவாமணி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் பாலுசாமி, தலைவர் ரகுபதி  மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் கள் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.சண்முக வேல், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.என்.முருகானந்தன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.

திருவாரூர் ஒன்றியத்தில் மாவூர் கடைவீதி, புதூர், புது புத்தூர் உள் ளிட்ட 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் வி.ராஜாங்கம் தலை மை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பை யன் ஆகியோர்  கண்டன உரையாற்றி னர். பின்னவாசல், வேப்பத்தங்குடி, குன்னியூர், புலிவலம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி ஒன்றியத்தில் 19  இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் கே.கோபிராஜ், தலைவர் ஆர். மணியன், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.செந்தில், தலைவர் சி.லோகநாதன் மற்றும் சிபி எம் ஒன்றியச் செயலாளர் டி.ஜெய பால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.சீனிவாசன் ஆகியோர் தலை மையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

வலங்கைமான்
வலங்கைமான் ஒன்றியத்தில் 9 இடங்களில், விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் என்.பாலையா, ஒன்றியத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, துணைச் செயலாளர் கே.சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இராதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நீடாமங்கலம் 

நீடாமங்கலத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒளிமதி ஊராட்சியில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பி.கந்தசாமி கண்டன உரை யாற்றினார். அமைப்பின் ஒன்றியச் செயலாளர் பி.காளியப்பன், ஒன்றியத் தலைவர் டி.முருகையன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜான்கென்னடி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சுமதி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் டி.அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.