திருவாரூர்/நாகப்பட்டினம், ஏப்.8- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடா மங்கலம், நன்னிலம் ஆகிய ஒன்றியங் களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலா ளர் பி.கோமதி, தலைவர் எஸ்.பவானி, பொருளாளர் ஆர்.சுமதி ஆகியோர் தலைமையில் 3 குழு அமைக்கப்பட்டு வட்டார தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், ‘‘வட்டார தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகிய கருவிகள் செயல்பாடு இல்லை; அதேபோல் அவசர சிகிச் சைக்கு பயன்படுத்த இரத்த வங்கி இல்லை; அவசர சிகிச்சை பிரிவு இல்லை; மருத்துவர்கள், செவிலியர் கள், சுகாதார பணியாளர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக திருவாரூர் ஒன்றியத் தில் உள்ள கோமல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் உள்ளார். சிடி ஸ்கேன் உள் ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லை. அதேபோல் திருத்துறைப்பூண்டி வட்டார மருத்துவமனையில் அவசர கால ஊர்தி 108 செயல்பாட்டில் இல்லை. சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் இல்லை. மேலும் நீடாமங்கலத்தில் வட்டார தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு இல்லை, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை கருவிகள் இல்லை. இதே நிலைதான் அனைத்து பகுதிகளும் உள்ளது. எனவே, அனைத்து காலியிடங்களுக்கும் பணி நியமனம் செய்ய வேண்டும், கர்ப்பிணி பெண்களுக்கு சில நேரங்களில் தொடர் மருத்துவ சிகிச்சை விடுபட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் ஒரு வருட சத்து உணவு நிறுத்தப்படுகிறது. சில நேரங்களை சிகிச்சை விடுபட்டா லும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு தொடர்ந்து 1 வருடம் வழங்க வேண்டும், சித்த மருத்துவமனை இல்லாத இடங்களில், சித்த மருத்துவ மனை நிறுவ வேண்டும். அவசரகால பிரிவு துவங்க வேண்டும். ரத்த வங்கி நிறுவ வேண்டும். சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து உடல் பரிசோதனை கருவிகள் செயல் பாடுடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’’ என இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. களஆய்வில் ஒன்றிய நிர்வாகிகள் கே.ஜெகதீஸ்வரி, ஆர்.சந்திரோதயம், பி.தனம், ஜோ.தமயந்தி, பிகலைச் செல்வி, எஸ்.செல்வி, எஸ்.திரிபுரா, ஆர்.கனகம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
நாகப்பட்டினம்
உலக சுகாதார தினத்தை முன் னிட்டு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நாகை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்டத்தில் உள்ள மருத்துவ மனைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலை யம், வட்டார தலைமை மருத்துவ மனை, மாவட்ட தலைமை மருத்துவ மனை உள்ளிட்டவற்றில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், மருத்துவர்கள், செவி லியர் பற்றாக்குறை, நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு வரும் நோயாளி களை திருவாரூர், தஞ்சாவூர் மருத்துவ மனைகளுக்கு பரிந்துரைத்து அனுப்பி வைப்பது, அறுவை அரங்குகளில் உப கரணங்கள் இல்லாதது, சில மருத்து வமனைகளில் அவசர ஊர்தி இல்லை, கர்ப்பிணிப் பெண்கள் அமர்வதற்கு நாற்காலிகள் இல்லை. குடிநீர், கழி வறை வசதி இல்லை. கள ஆய்வில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா, மாவட்டப் பொரு ளாளர் எஸ்.சுபாதேவி, மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.வளர்மதி, மாவட்ட துணைச் செயலாளர் சி.மாலா, எஸ்.அகிலா, வி.காந்திமதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.