districts

img

செப்.25 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் முடிவு

திருவாரூர், ஜூலை 18- தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேள னத்தின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஆ.கிருஷ்ணமூர்த்தி, செயல் தலைவராக ஆர்.லெனின், பொதுச் செயலாளராக என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம், பொருளாளராக சிட்டிபாபு மற்றும் 3 துணை பொது செய லாளர்கள், 10 துணைத் தலைவர்கள், 10 இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 62 மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.  இம்மாநாட்டில் கூட்டுறவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ள கோரிக்கை களை வலியுறுத்தி செப்டம்பர் 25 ஆம் தேதி  மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்து வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

;