districts

img

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தொடர் போராட்டம் பேச்சுவார்த்தை நடத்த சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், ஏப்.21 - திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (தணிக்கை) ஆர்.செல்வ கணபதி மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது பிறப்பித்த தண்டத்தீர்வை நோட்டீஸை ரத்து  செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட அளவில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்  நடைபெற்று வருகிறது.  கடந்த ஏப்.18 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை  சந்தித்து முறையிட்டும் தீர்வு எட்டப்படாத நிலை யில், ஏப்.20 ஆம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்க ளில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கள் கருப்பு பட்டை அணிந்து உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஏப். 25 ஆம் தேதி சென்னை தலைமை செய லகத்தில் துறை அமைச்சர் மற்றும் துறை செயலர்  இயக்குநர் ஆகியோரை சந்தித்து முறையிட உள்ளனர்.  மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்பு டைய ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியக் கூடிய வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஊழியர் களும் முழுமையாக போராட்டத்தில் பங்கேற்று இருப்பதால் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் நிறைவேற்றப்படாமல் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம  ஊராட்சிகளின் செயல்பாடுகள் தடைபட்டு உள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரும் மாவட்ட  வருவாய் அலுவலரும் மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமையின் திட்ட இயக்குநரும் தணிக்கைத் துறை அலுவலர்களும் விரைவாக செயல்பட்டு தேக்க நிலையை முடிவுக்கு கொண்டு வர நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் நடைபெறுகிற உள்ளிருப்பு போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், நகர செயலாளர், ஒன்றிய குழு  உறுப்பினர்கள், நகர குழு உறுப்பினர்கள் வாழ்த்தி  பேசினர்.