districts

img

சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்திடுக! வி.தொ.ச நன்னிலம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

குடவாசல், நவ.9- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்  சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியம் 20-வது மாநாடு பேரளத்தில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் ஏ.சங்கர் தலைமை வகித்தார். மூத்த தோழர் வி.கலியபெரு மாள் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர் உரை யாற்றினார். புதிய நிர்வாகிகளை அறி வித்து மாவட்டச் செயலாளர் ஆர்.குமார ராஜா நிறைவுரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், நகர  செயலாளர் சீனி.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் டி. வீரபாண்டியன், கே. தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றியத்தின் புதிய தலைவராக ஆர். சுந்தரமூர்த்தி, செயலாளராக எஸ்.சர வணசதீஷ்குமார், பொருளாளராக ஏ. சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நூறு நாள் வேலையை ஊராட்சிகளில் தொடர்ந்து வழங்கிட வேண்டும். குடி மனை பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு  நலத்திட்டங்களையும் உடனடியாக வழங்க வேண்டும். சேதம் அடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்  டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

;