குடவாசல், மே 31 - திருவாரூர் மாவட்டம் குட வாசல் வட்டம் கிள்ளியூர் கிரா மம் அக்ரகாரம் பகுதியை சார்ந்தவர் சந்திரமெளலி. இவர் கிள்ளியூர் சிபிஎம் உறுப்பினராக இருந்து வரு கிறார். இவரின் தந்தை பால சுப்பிரமணியத்தின் சுய சொத்தான நஞ்சை-புஞ்சை சொத்து 6 ஏக்கர் உள்ளது. இதில் குடவாசல் தாலுக்கா, கிள்ளியூர் கிராமத்தில் உள்ள புல எண் 4/21 ஐ இறந்த நபரின் பெயருக்கு வழங்கிய தவறான பட்டா எண் 697 என்ற பட்டாவை ரத்து செய்து,மீண்டும் பழைய பட்டா வான 681-ல் புல எண் 4/21 ஐ சேர்க்க வேண்டி பல முறை அரசு அலுவலகங்களுக்கு அலைந்தும் இதுநாள் வரையில் பட்டாவை மாற்ற முடியாமல் தனது வயதான தாயாரு டன் மன உளைச்சலுடன் உள்ளார். கிள்ளியூர் கிராம நிர்வாக அலுவலர் குரு மூர்த்தி, இறந்துபோன லலிதா என்பவர் பெய ரில் தவறான நோக்கத்துடன் வழங்கிய கூட்டுப் பட்டாவை நீக்கி தனது தாயார் ராஜம் மற்றும் தனது பெயருக்கு பட்டா மாறுதலுக்கான உத்த ரவு வழங்க வேண்டும் என்பது இவரது கோரிக் கையாகும். இதற்காக கடந்த 25 ஆம் தேதி குட வாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு அளித்துள் ளார். பாதிக்கப்பட்ட சந்திரமெளலியின் தந்தை பாலசுப்ரமணியத்தின் சொத்தின் அசல் பட்டா -ஆவணங்கள் அனைத்தும் இருந்தும், கிள்ளியூர் கிராம நிர்வாக அதிகாரி குரு மூர்த்தி கொடுத்துள்ள தவறான தகவலால் இந்த முறைகேடு நடந்துள்ளது. சந்திரமெளலியிடம் உள்ள முறையான ஆவணங்கள் மூலம் பலமுறை அரசு கவனத் தில் கொண்டு சென்றும் இதுநாள் வரையில் இவருக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. ஆகவே தவறுதலாக கொடுத்த பட்டாவை சரி செய்து சந்திரமௌலி கொடுத்துள்ள அசல் ஆவணங்கள் அடிப்படையில், இறந்த வர் பெயரிலான பட்டாவை நீக்கி சந்திரமௌ லிக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு சிபிஎம் குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் ஆகியோர் கூறி யுள்ளனர்.