குடவாசல், நவ.27 - திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரி ஒன்றியம் களத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வெண்ண வாசல் கிராமத்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஏழை-எளிய மக்களின் வீடுகளை நீதிமன்றம் உத்தரவு எனக் கூறி இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது. கொரடாச்சேரி ஒன்றியம் களத்தூர் ஊராட்சி வெண்ணவாசல் கிராமத்தில் 30 வீடுகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற முயற்சிக்கின்றனர். இந்நிலை யில் இதே இடத்தில் ஏற்கனவே 8 வீடு களை அதிரடியாக அகற்றியுள்ளனர். மேலும் 22 வீடுகளை அகற்றும் முயற்சி நடந்து வருகிறது. இதனையடுத்து சிபிஎம் தலைவர்கள் சம்பவ இடத் திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த னர். நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி 40, 50 ஆண்டுகளாக குடியிருக்கும் ஏழை - எளிய மக்களின் வீடுகளை இடிப்பது அராஜகமான செயல். இதனை ஏற்றுக் கொள்ள முடியாதது.
உரிய முறையில் மாற்று இடம்
குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் கொடுக்கும் போது, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகை யில், இழப்பீடு வழங்கிவிட்டு, பட்டா இடத்தில் வீடு வழங்க வேண்டும். ஆனால் இந்தப் பகுதியில், இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட 8 குடும்பங் களுக்கு, சம்பந்தமின்றி திருத்துறைப் பூண்டி ஒன்றியத்தில் மாற்று இடம் தந்துள்ளனர். குடியிருப்பு வாசிகள் தங்கள் குழந்தைகளின் பள்ளி படிப்பை தொடர்வதற்காக, இந்தப் பகுதியி லேயே வாடகைக்கு வீடு எடுத்து குடி யிருக்கின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே மாற்று இடம் கொடுத் ்தால்தான், குழந்தைகளின் படிப்புக் கும், வாழ்வாதாரத்துக்கும் உதவியாக இருக்கும்.
மக்கள் பாதிக்கப்படக் கூடாது
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஏழை-எளிய மக்கள் மீது கவனம் செலுத்தி உரிய நடவ டிக்கை வேண்டும். ‘நீதிமன்ற உத்தரவு’ என்ற உடன் அதிரடியாக முடிவெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வீடுகளை அகற்றுவதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். மேலும், தங்களது கோரிக்கைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சிய ரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்ப டும். தமிழக முழுவதும் நிலவும் இப்பிரச் சனையில், ஏழை மக்களின் வாழ்வா தாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரி டம் கோரிக்கை வைக்கப்படும் என பாதிக் கப்பட்ட மக்களை சந்தித்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் ஆகியோர் கூறினார். ஆய்வின் போது மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.சேகர், வி.எஸ். கலியபெருமாள், பி.கந்தசாமி மற்றும் கொரடாச்சேரி ஒன்றிய செயலா ளர் டி.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பி னர்கள் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன், கே.எஸ்.செந்தில், களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.விஜயகுமாரி ஆகி யோர் உடனிருந்தனர்.