மன்னார்குடி, ஜூன் 24 - திருவாரூர் மாவட்டம் வருவாய் வட்ட தலைநகர மான கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலைக் கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. புதிய கல்லூரியின் அடிப் படை கட்டுமான வசதிகள், மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் முறையாக துவக்கப்படுவதற்கான முதற்கட்ட ஆயத்த பணிகளை மேற்கொள்ள, மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவரும், சிறந்த ஆசிரியருமான பேரா.முனை வர் மாறன் பொறுப்பு முதல்வ ராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வியாழனன்று பணி யில் இணைந்தார். சுமார் 40 ஆயிரம் மக்கள்தொகையை கொண்ட கூத்தாநல்லூர், முஸ்லீம் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் வர லாற்று சிறப்பு மிக்க நகரமா கும். இந்நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாழும் ஏழை-எளிய மக்க ளின் நீண்ட நாள் கனவாக இருந்த அரசு கலை கல்லூரி திமுக ஆட்சியில் நனவாகி யுள்ளது. 19.11.2021 அன்று 10 அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகள் திறக்கப் படுவதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 2022 - 2023 ஆம் ஆண்டிற் கான உயர்கல்வி மானிய கோரிக்கையின் போது, 11.4. 2022 அன்று மேலும் 10 கல்லூ ரிகள் (மொத்தம் 20 கல்லூரி கள்) திறக்கப்படுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 6 கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில் மட்டும் துவக்கப்பட உள்ளது. இதில் கூத்தாநல்லூரில் அமையவிருக்கும் மகளிர் கல்லூரியும் ஒன்றாகும். சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் மு.பாத்திமா பஷீரா ஜின்னா ஆகியோர் கல்லூரி அமையவிருக்கும் கூத்தா நல்லூர் ஜின்னா தெரு கட்டி டத்திற்கு வந்து மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தனர். அப்போது பொறுப்பு முதல்வர் பேரா.மாறனும் உடனிருந்தார்.