districts

img

நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் வாக்குச் சேகரிப்பு

திருவாரூர், மார்ச் 30 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி, மேலமருதூரில் இந்தியா கூட்டணி சார்பாக நாகை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ் தனது பிரச்சாரப் பயணத்தை துவங்கினார். நாகை நாடாளுமன்ற தொகுதி தலை வரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே.கலைவாணன் தலைமையில், இந்தியா கூட்டணி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  

அப்போது, வேட்பாளர் செல்வராஜ் மக்களை நேரில் சந்தித்து “எளிய மக்க ளின் சின்னமான கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து, என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.  

சென்ற இடங்களில் எல்லாம் வேட்பாள ரை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று, “எங்கள் வாக்கு உங்களுக்குத்தான்” என உற்சாகமாக குரல் எழுப்பினர்.  பிரச்சாரப் பயணத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.