திருவாரூர், ஏப்.29 - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்ப டும் மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல், ஒரு சிறு தள்ளுவண்டியில் வைத்து, மருத்துவ மனையில் இருந்து நேரடியாக தஞ்சா வூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ் சாலை ஓரத்தில் ஒரு பகுதியில் குவிக் கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கழிவுகள் கொட்டப் பட்டுள்ள இடமானது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அரு கிலேயே உள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவ கழிவுகள் உள்பட அனைத்து மருத்துவக் கழிவு களும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என விதிகள் உள்ள நிலையில், அந்த விதிகள் எதையும் பின்பற்றா மல் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங் கள், மருத்துவமனை ஊழியர்கள், செவி லியர்கள் மற்றும் மருத்துவர்கள் பயன்ப டுத்திய உடைகள், மருந்துகள், சிரிஞ்சு கள் உட்பட அனைத்தும் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதனை ஆடுகள், மாடுகள், நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் உண்டு வருகின்றன. இந்த மருத்துவ கழிவுகள் நள்ளி ரவு நேரத்தில மர்ம நபர்களால் கொளுத் தப்படுகிற நிலையும் உள்ளது. இத னால் அந்த பகுதி முழுவதுமே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. அந்த பகுதியில் இருந்து 10 கி.மீட்டர் சுற்றள விற்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாம லும் மூச்சுவிட முடியாமலும் கடும் சிர மத்திற்கு உள்ளாகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள், அரசு அதி காரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் திருவாரூர் அரசு மருத் துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜிடம், திருவாரூர் அரசு மருத்துவ மனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகள் அனைத்தையும் விதிகளை பின்பற்றி முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால் அமைச்சரின் அறிவுறுத்த லுக்குப் பின்பும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுகள் பொதுவெளி யில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப் பட்டு நள்ளிரவில் கொளுத்தப்படும் செயல் தொடர்கிறது. இதனால் பொது மக்கள் தீராத சுவாச நோயால் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.