குடவாசல், ஏப்.27 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் எம்.ஜி.ஆர் அரசு கல்லூரியில் இந்திய மாண வர் சங்கத்தின் முதலாவது கிளை மாநாடு குட வாசல் அருகே உள்ள ஓகை சண்முகம் பிள்ளை திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இரா.சூர்யா மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா.ஹரிசுர்ஜித் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டினை வாழ்த்தி மாநில மாணவிகள் உபகுழு பொறுப்பாளர் ரெ.கார்த்திகா தேவி, மாவட்ட தலைவர் பா.ஆனந்த், மாவட்ட துணை செய லாளர் பா.சுகதேவ் ஆகியோர் பேசினர். நிறைவாக 22 பேர் கொண்ட கல்லூரி மாணவர் கிளை அமைக்கப்பட்டு புதிய கிளைக்கு தலைவராக சி.முல்லைவேந்தன், செயலாளராக என்.முஜீப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதை அறிவித்து மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் நிறைவுரையாற்றி னார். முன்னதாக கல்லூரியிலிருந்து ஓகை கடைவீதி வழியே பேரணியாக சென்று கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றக் கோரி முழக்கமிட்டு மாணவ-மாணவி கள் கிளை மாநாடு நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஓகையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் தற்காலிக மாக செயல்பட துவங்கி, தற்போது வரை பள்ளி வளாகத்தில் கல்லூரி செயல்பட்டு வரு கிறது. இதனால் மாணவ, மாணவிகள் கல்வி கற்க சிரமமான நிலை உள்ளது. எனவே மாண வர்களின் நலன் கருதி குடவாசல் வட்டார பகுதி யில் கல்லூரிக்கான இடத்தை தேர்வு செய்து உடனடியாக கல்லூரி கட்ட வேண்டும். மாண வர்களின் எண்ணிக்கை ஏற்ப பேராசிரியர் களை நியமிக்க வேண்டும். கிராமப்புற மாண வர்களின் நலன் கருதி புதிய பாடத் திட்டங்களை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.