திருவாரூர், ஜூன் 11 - குழந்தைகள் மையங்களில் 6 வய திற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச் சத்து நிலையை மேம்படுத்துதல், குழந் தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் வி.அமுதவள்ளி தலைமை யில் ஆய்வுக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வரு வாய் அலுவலர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் உள்ள குழந்தை கள் மையங்களில் குழந்தைகளின் வருகையை உறுதி செய்து நமது மையம், நமது குழந்தைகள் என்பதை அங்கன் வாடி பணியாளர்கள் உணர்ந்து குழந் தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும். குழந் தைகள் மையத்திற்கு வராத குழந்தை களை கண்டறிந்து அவர்களை வர வைத்திட வேண்டும். அவர்களின் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச் சத்து உணவுகளின் அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும். குழந்தைகள் மையத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கிய நிலையை மேம்படுத்திட வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் வளர்ந்திட அனைவரும் பாடுபட வேண்டும் என ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் தெரி வித்தார்.