திருவாரூர், ஜூலை 14 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டையொட்டி, திரு வாரூர் மாவட்டத்தில் உள்ள 10 கிளைகளில் பெயர் பலகை திறப்பு விழா ஜூலை 12 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட அரசு ஊழி யர் சங்க கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் சு.ஜெயராமன் தலைமை வகித் தார். கிளைச் செயலாளர் பொன். மகாலிங்கம் முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்டத் தலைவர் மு.சௌந்தரராஜன், பெயர் பலகையை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்க டேசன் பொன் விழா ஆண்டின் சிறப்பை விளக்கி உரையாற்றினார்.
விழாவில் மூத்த தோழர் களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. கிளை பொரு ளாளர் நாக.அசோக்ராஜ் நன்றி கூறினார்.
குடவாசல்
குடவாசல் கிளை சார்பில் நடந்த பொன்விழா பெயர் பலகை திறப்பு விழாவுக்கு கிளைத் தலைவர் பா.கலைவாணன் தலைமை வகித்தார். கிளைச் செய லாளர் எஸ்.நீதிராஜன் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி பொன் விழா பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பு, புத்தக உரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் கிளை பொருளாளர் ஏ.வி. சுப்பிர மணியன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாக்களில் மாவட்டத் தலைவர் மு.செளந்தரராஜன், மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்க டேசன் மற்றும் நிர்வாகிகள் பொன்விழா வரலாறு குறித்து சிறப்புரையாற்றினர்.