districts

img

தோழர் ஆர்.ஞானசேகரன் நினைவு கல்வெட்டு திறப்பு

திருவாரூர், ஜூலை 6 - மறைந்த தோழர் ஆர்.ஞானசேகரன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குடவாசல் தெற்கு ஒன்றியம் சார்பில், வடவேர் கிராமத்தில் உள்ள  மாதா கோவில் தெருவில் நினைவு கொடிமரம், கல் வெட்டு திறப்பு விழா சனிக் கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் டி.அந் தோணி எட்வர்டுராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, தோழர் ஞான சேகரன் நினைவு கல் வெட்டை திறந்து வைத்து  புகழஞ்சலி உரையாற்றி னார். ஞானசேகரன் நினைவு கல்வெட்டில் அமைக்கப்பட்ட கொடி மரத்தில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் டி.வீரபாண்டி யன் செங்கொடியை ஏற்றி வைத்தார். சிபிஎம் குடவாசல் ஒன்றி யச் செயலாளர் எம்.கோபி நாத், நகரச் செயலாளர் டி. ஜி.சேகர், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் எப்.கெரக் கோரியா, ஆர்.லெட்சுமி மற்றும் கட்சியின் வடவேர்  முன்னாள் ஊராட்சி மன்ற  தலைவர் பக்கிரிசாமி, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தி னர் மற்றும் தோழர் ஞான சேகரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சிரோன் மணி ஞானசேகரன் நன்றி கூறினார்.