திருவாரூர், நவ.29- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் திரு வாரூர் வேலுடையார் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட துணைத் தலைவர் பா.தண்டபாணி தலைமை வகித்தார். மாநில செய லாக்க குழு உறுப்பினர் எஸ். ஞானசேகரன் முன்னிலை வகித்தார். மாநிலச் செய லாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங் கிணைப்பாளர் வீ.விஜயன் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து வந்துள்ள 79 ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 9 ஆய்வறிக்கைகள் டிசம்பர் 10, 11 ஆம் தேதிகளில் தூத் துக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான மாநாட் டில் சமர்ப்பிக்கப்பட உள் ளன. நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட ஆய்வு கட்டு ரைகளுக்கு மாவட்டத் தலை வர் யு.எஸ்.பொன்முடி, வேலுடையார் கல்வி குழு மத்தின் தாளாளர் கே.கே. எஸ்.தியாகபாரி ஆகி யோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். மாவட்டப் பொருளாளர் மு.சாந்த குமாரி நன்றி கூறினார்.