districts

இளைஞர் ரமேஷ் மர்ம மரண வழக்கில் மறு விசாரணை துவக்கம்

திருவாரூர், ஏப்.22 - திருவாரூர் அலிவலம் ஊராட்சியில் வசித்து வரும்  ஆர்.கனகவள்ளியின் கண வர் மெக்கானிக் தொழில் செய்து வந்த இளைஞர் எம்.ரமேஷ் (40) மர்மமான முறையில் மரணமடைந்தார். இது குறித்து முழுமை யான விசாரணை மேற்கொள் ளாமல் விபத்து மரணமாக அவசரகதியில் வழக்கை முடித்து ரமேஷின் உடலை  உறவினர்களை வலுக்கட்டா யமாக பெற வைத்து அடக்கம்  செய்ய வைத்து விட்டனர். இதனால் கணவனை இழந்த  கனகவள்ளி தனது குழந்தை களுடன் மிகுந்த மன உளைச் சலுக்கு ஆளாகி கடந்த 8 மாதங்களாக தனக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்.  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மும் ரமேஷ் குடும்பத்திற்கு  ஆதரவாக களமிறங்கி யுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில்  பங்கேற்பதற்காக திருவா ரூர் வந்த மாதர் சங்க மாநில  செயலாளர் பி.சுகந்தியிடம் கனகவள்ளி மனு ஒன்றை அளித்தார். அதே போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிடமும் மனு அளித்திருந்தார். இதன் காரணமாக சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. விஜயகுமாரை சந்தித்து உரிய மறுபுலன் விசாரணை கோரி வலியுறுத்தினார்.  இதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நன்னிலம் மாவட்ட துணை  கண்காணிப்பாளர் ஏ.இளங் கோவனை விசாரணை அதி காரியாக நியமித்து உரிய  விசாரணை நடத்திட உத்தர விட்டார். இதனையடுத்து வியாழக்கிழமை கணவனை இழந்த ஆர்.கனகவள்ளி மற்றும் அவரது சகோதரர் டி.சரவணக்குமார் ஆகி யோரை நேரில் அழைத்து  விசாரணை மேற்கொண்டார்.  விசாரணைக்குப் பிறகு டி.எஸ்.பி ஏ.இளங்கோவன் சம்பவம் நடந்த இடமான பாக்கம் கோட்டூர் ஊராட்சி ஜமாத் நிர்வாகிகள், வெளி நாடு தப்பிச் சென்றுள்ள நபர்கள், அவரது உறவி னர்கள் ஆகியோரிடம் மேலும் விவரங்கள் சே கரித்து உங்களுக்கு நியாயம்  கிடைக்கும் வகையில்  மாவட்ட கண்காணிப்பாளரி டம் அறிக்கை சமர்ப்பிப்ப தாக கூறினார்.