திருவாரூர், பிப்.5 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பிற்கு தேர்வான 9 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பாராட்டினார். திருவாரூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் நீட் தேர்விற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கிறது. கடந்த 2021-2022 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்பில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 167 மாணவ-மாணவிகள் பயின்றனர். இதில் 57 மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண் அடிப்படையில் 7 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பிற்கும், 2 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பல் மருத்துவப் படிப்பிற்கும் தேர்வாகியுள்ளனர்.
அதன்படி திருவாரூர், கூத்தா நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.மணிமேகலை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கொர டாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.கே.பிரதாப் சேலம் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரியி லும், பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.வினோத் கோயம் புத்தூர் கற்பகம் மருத்துவக் கல்லூரியி லும், பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் இ.பாஸ்கர் கன்னியா குமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளி மாணவி கே.நிலவழகி புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியி லும், கலப்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பாலசூர்யா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும், கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளியினை சேர்ந்த மாணவர் ஆர்.கே.பிரதீப் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியிலும், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.ஆதித்யா தஞ்சா வூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், திருமக்கோட்டை பி.வி.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.ஆஷா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி யிலும் தேர்வாகியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.