திருவாரூர், ஏப்.25 - திருவாரூர் மாவட்டத்தில் ஆர்.சி.பாத்திமா உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டுவோர், உதவி உபகரணங்களான மூன்று சக்கரவண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடை பயிற்றுவண்டி, கை,கால் செயற்கை அவயங் களுக்கான காலிப்பர்கள், கல்வி உதவித் தொகை மற்றும் இலவச அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் மதிப்பீட்டு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி ஏப்.26 அன்று கொரடாச்சேரி ஒன்றியத்திலும், ஏப்.27 அன்று வலங்கை மான் ஒன்றியத்திலும், ஏப்.28 அன்று மன்னார்குடி ஒன்றியத்திலும், ஏப்.29 அன்று திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலும், ஏப்.30 அன்று நன்னிலம் ஒன்றியத்திலும், மே 2 அன்று நீடாமங்கலம் ஒன்றியத்திலும், மே 4 அன்று குடவாசல் ஒன்றியத்திலும், மே 5 அன்று கோட்டூர் ஒன்றியத்திலும், மே 6 அன்று முத்துப் பேட்டை ஒன்றியத்திலும் நடைபெற உள்ளது. ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், தலைமையாசிரியர் சான்று (படிக்கும் மாணவர்களுக்கு), மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை புத்தக நகல் ஆகியவற்றுடன் மேற்குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் மருத்துவ மதிப்பீட்டு முகாம்க ளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.