districts

ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ரூ.1000 வழங்க கோரிக்கை

திருவாரூர், ஜூலை 27 -  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க கட்டி டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரவைக்கு மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வி.நாகராஜன் கொடியை ஏற்றி  வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.புஷ்பநாதன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளா ளர் பி.சந்திரசேகர் நிதிநிலை அறிக்கை வாசித்தார். 

மாவட்டத் தலைவராக எஸ்.தமிழ்ச்செல் வன், மாவட்டச் செயலாளராக எஸ்.புஷ்பநா தன், மாவட்டப் பொருளாளராக பி.சந்திரசேக ரன் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட னர். 

ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் களுக்கு மருத்துவப்படி மாதம் ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கை அளித்த வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,  பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த  வேண்டும். 70 வயதில் 10 சதவீதம் கூடு தல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 20  ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், செப்டம்பர் 12 ஆம் தேதி சேலத்தில் நடை பெறும் மாநில பிரதிநிதித்துவ பேரவைக்கு 5  பிரதிநிதிகளை அனுப்புவது என தீர்மானிக் கப்பட்டது.