districts

img

முன்களப் பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்குக! ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஏப்.9- தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் ரூ.15 ஆயிரம்  வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதோடு நிலுவையில்லாமல் மாத சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. முனியாண்டி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் டி.முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் லோகநாயகி, மாநில நிர்வாகிகள் எஸ்.காமராஜ், கே.ஆறுமுகம், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.ரெகுபதி உள்ளிட்டோர் உரையாற்றினர். நகராட்சி, பேரூராட்சி, ஊராட் சியில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.