districts

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டல் நிகழ்ச்சி

திருவாரூர், ஜூன் 29 - 2021 - 22 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு    முடித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்ந்து வாழ்வில் உன்னத    நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அடுத்த மைல் கல்லாக ‘கல்லூரிக் கனவு’ என்னும் சிறப்பு  வழிகாட்டல் நிகழ்ச்சியினை தமிழக முதல்வர்  ஜூன் 25 அன்று சென்னை நேரு உள்விளை யாட்டரங்கில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங் களிலும் ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை  2 ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெறும் என  அறிவிக்கப்பட்டது.  திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 1 அன்று  மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணை அறிவியல் படிப்பு கள், கலை மற்றும் அறிவியல், வணிக வியல் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயர்கல்விப் படிப்பு கள் சார்ந்தும் அரசு மற்றும் தனியார் துறை களில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும்  இப்படிப்புகள் படிப்பதற்கான வங்கி கடன்கள் பெறுவது குறித்தும், கல்வி உதவித் தொகை பெறுவது குறித்தும் சிறந்த  வல்லுநர்களால் வழிகாட்டல் வழங்கப்பட வுள்ளது.  இதில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களைச் சார்ந்த சுமார் 1200 மாணவ, மாணவி யர்கள் பங்கேற்று பயன்பெற உள்ளனர். மேலும், உயர்கல்விக்கான வங்கிக் கடன் பெறுதல் தொடர்பாகவும், உயர்கல்வி நிறுவ னங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் காட்சிகள் மாணவ, மாணவியர்கள் பயன்பெ றும் வகையில் காட்சிப்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.