திருவாரூர், ஜூன் 3 - திருவாரூர்-மன்னார்குடி சாலையை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் விள மல் சாலையில் இருந்து, இடதுபுறம் பிரியும் கூட்டுறவு மேலாண்மை வளாகம் செல்லும் சாலை சுமார் 9 ஆண்டு காலமாக மண் சாலை யாக கிடக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர்களால் காணொலிக் காட்சி மூலம் இச்சாலைக்கான பணிகள் துவங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கி ணைந்த வளாகத்தில் உள்ள இந்த சாலை கவனிப்பாரற்று கிடப்பது வருத்தத்துக்குரி யது. மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவல கம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் தலைவர் குடியிருப்பு ஆகியவற்றுக்கு செல்லும் வழியில்தான் இந்த சாலை உள்ளது. இச்சாலை பொது விநியோகத் திட்ட மாவட்ட துணை பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு பயிற்சி நிலையம் என மிக முக்கி யத்துவம் வாய்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ள சாலையாகும். இங்கு இயங்கி வரும் கூட்டுறவு பயிற்சி மையத்துக்கு மட்டும் தினமும் 350 மாணவ, மாணவியர்கள் படிப்பிற் காக வந்து செல்கின்றனர். கோடைகாலங்களில் புழுதிக் காடாகவும், மழைக்காலங்களில் சகதி மேடாகவும் காட்சியளிக்கிற இந்த சாலையில் சென்று வரு வதே சாகசப் பயணமாக இருக்கிறது. இச்சாலை தார்ச்சாலையாக மாற்றப்பட வேண்டும். அதற்கான பணிகளை தொடர்பு டைய நிர்வாகம் உடனடியாக துவக்கிட வேண்டும் என்பது இப்பகுதிக்கு பொதுமக்க ளின் கோரிக்கையாக உள்ளது.