திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், ஆய்க்குடி ஊராட்சி கொள்ள கண்டம் கிராமத்தில் வசிக்கும் ரகு மற்றும் செங்கதிர் ஆகியோரின் வீடுகளில் மின் கசிவினால் செவ்வாயன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கட்சியின் சார்பாக நிதி அளித்தார். கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால். ஊராட்சி 7-வார்டு உறுப்பினர் பி.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.