திருவாரூர், ஏப்.16 - கொரோனாவை கட்டுப் படுத்தியதில் தடுப்பூசி களுக்கு முக்கிய பங்கு உண்டு. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். முதல் தவணை எடுத்துக் கொண்டு, இரண்டாவது தவ ணை எடுத்துக் கொள்ளாத வர்களும் லட்சக்கணக்கில் உள்ளனர். அரசின் சொல்படி கேட்டு நடந்து 2 தவணை தடுப்பூசியும் எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர். குறிப் பாக விமானப் பயணம் மேற் கொள்பவர்கள் கண்டிப்பாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என அனைத்து நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளன. தடுப் பூசியே போட்டுக் கொள்ளா தவர்களுக்கு தனிப்பட்டியல் உண்டு. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பூஸ்டர் டோஸ் போடும் பணி நடைபெற்று வருவதாக ஊடகங்கள் வாயி லாக தெரிய வருகிறது. தனி யார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஏற்கனவே எடுத்துக் கொண்ட கோவிஷீல்ட், கோ வாக்சின் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று ஆளும் அரசுகள் தெரி விக்கின்றன. ஆனால் தடுப்பூசி முகாம்களும் நிறுத்தப்பட்டு விட்டன. அந்தந்த மாவட்ட ஆட்சி யர்களும், சுகாதாரத் துறை யும், சூழ்நிலைக்கேற்ப முடி வெடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறி வித்துள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதங்களை கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அறிவுறுத்தி, தகுதி வாய்ந்த வர்களுக்கு குறுஞ்செய்தி கள் மூலம் தொடர்ந்து தகவல் வருகிறது. இதன் பின்னர் ஏற்க னவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட முகாம்களில் விசா ரித்தால் உரிய பதில் இல்லை. பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாமா? அதற்கான ஏற்பாடு என்ன? என்ற கேள்வி களுக்கு சுகாதார ஆய்வா ளர்களிடம் எந்த பதிலும் இல்லை. எனவே அரசு அலட்சியம் காட்டாமல் முழுமையாக தடுப்பூசி செலுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும் இதற்கான உரிய அறிவிப்பு களை உடனடியாக வெளியிட வேண்டும். (ந.நி)