மன்னார்குடி, பிப்.24- மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மன்னார்குடி முன்னாள் ஒன்றியச் செய லாளர் டி.பன்னீர்செல் வத்தின் 2-ஆவது நினைவு தினம் தலையாமங்கலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தோழர் டி.பன்னீர் செல்வம். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால், மூத்த கட்சித் தோழர் கே.டி.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடி வில், தோழர் டி.பன்னீர் செல்வத்தின் புதல்வர் டி.பி.மணிகண்டன், கட்சி நன் கொடையாக ரூ.10 ஆயி ரத்தை மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியிடம் அளித்தார்.