districts

img

தோழர் டி.பன்னீர்செல்வம் நினைவு கல்வெட்டு திறப்பு

மன்னார்குடி, பிப்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய முன்னாள் செயலா ளர் தோழர் டி.பன்னீர்செல்வத் தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் செவ்வா யன்று, கட்சியின் மன்னார் குடி ஒன்றிய குழு சார்பாக கடைபிடிக்கப்பட்டது. இதனை யொட்டி தோழர் டி.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தலையாமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு  ஒன்றியச் செயலாளர் கை. ஜெயபால் தலைமை வகித் தார். முதல் நிகழ்ச்சியாக தோழர் பன்னீர்செல்வம் நினைவு கல்வெட்டை மாவட்ட  செயற்குழு உறுப்பினர் குமாரராஜா திறந்து வைத் தார். கட்சியின் கொடியை மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி ஏற்றி வைத்து,  டி.பன்னீர்செல்வம் நினைவு களை போற்றி சிறப்புரை யாற்றினார்.  கட்சியின் மூத்த தோ ழர்கள் கே.டி.கந்தசாமி, எஸ். பொன்னுசாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்  ஜி.ரகுபதி, சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் ஏ.பி.டி. லோகநாயகி, ஜி. முத்துகிருஷ் ணன், ஏ.பி.தனுஷ்கோடி, கே.பிச்சைக்கண்ணு, கிளை செயலாளர்கள், கட்சி உறுப் பினர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.