districts

img

மகளிர் தின மிதிவண்டி பேரணி ஆட்சியர் தி.சாருஸ்ரீ பங்கேற்பு

திருவாரூர், மார்ச் 9-  திருவாரூர் நகராட்சி பகுதியில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் புதிய ரயில் நிலை யத்திலிருந்து நடைபெற்ற மகளிர் தின மிதிவண்டி பேரணியில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பங்கேற்றார்.  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலை வாணன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி பழைய பேருந்துநிலையம், முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.  பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பரியா செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நக ராட்சி ஆணையர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.