districts

img

தோழர் கே.கலியபெருமாள் காலமானார்

திருவாரூர், அக்.20 - திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியம் திருமிச்சூர் கிராமம்  கட்டளைத் தெருவில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பின ரும், சிஐடியு பேரளம் ரயில்வே  குட்செட் தொழிலாளர் சங்கத்தின்  தலைவருமான கே.கலியபெரு மாள் காலமானார். அவருக்கு வயது 80.

மறைவு செய்தி குறித்து அறிந்த, கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர்,  மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் கலியபெருமாள் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். சிஐடியு ரயில்வே குட்செட் தொழிலாளர் சங்கம் சார்பாக தலைவர் கண்ணையன் தலை மையில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மறைந்த கலியபெருமாள் குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.