மன்னார்குடி, ஏப்.6 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி வைணவ கோவிலில் செவ்வாயன்று பங்குனி வெண்ணைத்தாழி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 80 ஆயிரம் மக்கள் தமிழ்நாட் டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இத்திரு விழாவை காண்பதற்காக கூடுகின்றனர். சுட்டெரிக்கும் கடும் கோ டையில் நெரிசல் மிகுந்த மேல ராஜவீதி கடைவீதியில் உள்ள சாகர் ஜவுளி நிறுவனத் தில் இஸ்லாமிய ஊழியர்கள், தங்கள் ரமலான் மாத நோன்பு கடைபிடிக்கும் நேரத்தி லேயே சுற்றுலா வந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்க ளுக்கு நீர் மோர், பானகம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் பொட்டலங் கள் மற்றும் பல்லாயிரக்கணக் கான கைவிசிறிகளை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை விநியோகித்தனர். இதுகுறித்து ஹைதரா பாத்திலிருந்து வெண்ணைத் தாழி திருவிழாவிற்கு வந்திருந்த வைணவ இந்து பெரியவர் ஒருவர் கூறுகை யில், ரமலான் மாதத்தில் பட்டினி கிடந்து விரதம் இருக்கும் இவர்கள், மற்ற வர் பசியைப் போக்கு வதற்கு சாப்பாடு கொடுப்பது பண்பில் மிகச் சிறந்தது என்றார். நீண்ட காலமாக இந்நிறு வனத்தின் இஸ்லாமிய பெரு மக்கள் மனிதநேய நல்லிணக் கத்தின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் தொண்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரு கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.