திருவாரூர், மே 28 - பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உரு வாக்கும் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கி களின் மூலமாக கடனுதவி பெற்று புதிதாக தொழில் தொடங்க ஆர்வமிக்க தொழில் முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்கீடாக 135 விண்ணப்பங் களுக்கு ரூ.390 லட்சம் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரை யிலும், சேவை தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் கடன் உதவி பெற்று தொழில் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பு வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பிய வர்களாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரை யிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி தேவையில்லை. இதற்கு அதிகமான மதிப்பி லான தொழில் திட்டங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விவசாயம், போக்கு வரத்து, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு போன்ற பண்ணை சார்ந்த தொழில்கள், புகை யிலை, பாலித்தீன் பைகள் உற்பத்தி (20 மைக்ரானுக்கு குறைவு) தொழில்கள் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படமாட்டாது. இத்திட்டத்தின் கீழ் வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிக பட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீதம், கிராமப் புறத்தில் 35 சதவீதமும் மானியமாக வழங்கப் படுகிறது. சொந்த மூலதனம் பொது பிரிவின ருக்கு திட்டமதிப்பீட்டில் 10 சதவீதம், மற்ற பிரி வினருக்கு 5 சதவீதம் ஆகும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in என்கிற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், திருவாரூர் அலுவலகத் தினை நேரிலோ அல்லது 04365-224402 என்கிற அலுவலக தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.