திருவாரூர், ஜன.24- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாட்டு முடிவு கள் விளக்க சிறப்பு பேரவை செவ்வா யன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பாக நடைபெற்றது. பேரவைக்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். சேகர், பொருளாளர் வி.எஸ்.கலியபெரு மாள், மாநிலக் குழு உறுப்பினர் கே.தமிழ்ச் செல்வி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கள் பங்கேற்றனர். பேரவையில் பங்கேற்ற தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் சாமி. நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு அரசு நெல் குவிண் டாலுக்கு ரூ.2000 வழங்கிட வேண்டும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை செய்த வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதார விலையை (C2+50) நிர்ணயிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். குடியரசு தினத்தன்று (ஜன. 26) மாலை 3 மணியளவில் ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பாக திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, புகை வண்டி நிலையம் வரை நடைபெற உள்ள மாபெரும் டிராக்டர் பேரணியில் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும்” என்றார்.